சனத் நிஷாந்தவின் மறைவு முழு நாட்டுக்கும் பேரிழப்பு! -மஹிந்த

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சனத் நிஷாந்தவின் மறைவு முழு நாட்டுக்கும் பேரிழப்பு! -மஹிந்த

 

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு எமது கட்சிக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பு. புத்தளம் மாவட்டம் சிறந்த தலைமைத்துவத்தை இழந்து விட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் கொழும்பில் உள்ள மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆளும் மற்றும் எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பூதலுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு எமது கட்சிக்கு மாத்திரமல்ல நாட்டுக்கும் பேரழிப்பு. அச்சம் என்பது அறியாதவர். பல சவாலான சந்தர்ப்பத்திலும் முன்னின்று செயற்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டம் சிறந்த தலைமைத்துவத்தை இழந்து விட்டது என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.