ஆடைகள் திருடிய குற்றச்சாட்டில் பெண் எம்.பி இராஜினாமா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆடைகள் திருடிய குற்றச்சாட்டில் பெண் எம்.பி இராஜினாமா!


வர்த்தக நோக்கத்திற்காக ஆடைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலக முடிவு செய்துள்ளார்.


நியூசிலாந்தின் மத்திய-இடது பசுமைக் கட்சியின் உறுப்பினர் கோல்ரீஸ் கஹ்ராமன் (Golriz Ghahraman), ஆடைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இராஜினாமா செய்தார்.


நியூசிலாந்துக்கு அகதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.பி., கோல்ரிஸ் ஆவார்.


43 வயதான அவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிடுபவராவார். ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகளுக்காக வாதிட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.


ஓக்லாந்தில் உள்ள ஒரு ஆடம்பர சில்லறை விற்பனையாளரிடமிருந்து ஆடைகள் திருடப்பட்டது தொடர்பான பொலிஸாரின் விசாரணைக்குப் பிறகு, பதவி விலக கோல்ரிஸின் முடிவு செய்துள்ளார்.


குற்றம் சாட்டப்பட்டபோது ஆடைகளைத் திருடியதை கோல்ரீஸ் ஒப்புக்கொண்டார்.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தவறு என்று தெரிந்தும், அந்த மன அழுத்த சூழ்நிலையை போக்கவே அவ்வாறு செய்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.


https://www.bbc.com/news/world-asia-67992597


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.