துப்பாக்கி ரவைகளுடன் தலதா மாளிகைக்குள் பிரவேசிக்க முயற்சித்தவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துப்பாக்கி ரவைகளுடன் தலதா மாளிகைக்குள் பிரவேசிக்க முயற்சித்தவர் கைது!


கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குள் பிரவேசிக்க முயற்சித்த நபரொருவரின் பயணப் பொதியில் 6 வெற்று தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகையின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து கேகாலையைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபரிடம் அனுமதிப்பத்திரம் கொண்ட துப்பாக்கி இருப்பது  விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.