அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் பலியான தாய் மற்றும் மகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் பலியான தாய் மற்றும் மகள்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.


கொழும்பில் இருந்து மத்தளை நோக்கி பயணித்த சிற்றுந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஹம்பலாந்தோட்டை பகுதியை சேர்ந்த 57 வயதான தாயும், 32 வயதான மகளும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


நேற்றிரவு (03) இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 04 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.