18 வயதுக்கு மேற்பட்டவர்கள் TIN பெறாத நிலையில் 50 ஆயிரம் அபராதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் TIN பெறாத நிலையில் 50 ஆயிரம் அபராதம்!


இம்மாதம் முதலாம் திகதி முதல் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை (TIN) பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN Number இனை பெற்றுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை இலக்மொன்று இருப்பதை போலவே TIN Number இருக்க வேண்டியதும் அவசியமாகும். வரி செலுத்தக்கூடிய அளவிலான வருமானம் இருக்குமாயின் அவர்கள் வரி செலுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கான வரிக் கோப்பும்திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஒரு வருடத்தில் (ஒரு வருடத்தின் ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை) 1,200,000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் நபர்கள் வருமான வரிக் கோப்பை திறக்க வேண்டும்.


இதனை, பொது மக்கள் www.ird.gov.lk என்ற இணையத்தில் பதிவு செய்யலாம், தபால் மூலம் பதிவு செய்யலாம் அல்லது இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் நேரில் பதிவு செய்யலாம்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.