இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால குழு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால குழு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!


இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அலுவல்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால குழுவொன்றை நியமித்தமைக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நிறைவுறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) தீர்மானித்துள்ளது.


முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


எவ்வாறாயினும், எதிர்காலத்தில் ஏதேனும் நியாயமான காரணம் எழுந்தால், மனுவை மீண்டும் அழைப்பதற்கான உரிமை மனுதாரர்களுக்கு உள்ளதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்து, குறித்த விசாரணையை நிறைவு செய்துள்ளது.


முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால், நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகக் குழு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.