இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அலுவல்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால குழுவொன்றை நியமித்தமைக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நிறைவுறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) தீர்மானித்துள்ளது.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் ஏதேனும் நியாயமான காரணம் எழுந்தால், மனுவை மீண்டும் அழைப்பதற்கான உரிமை மனுதாரர்களுக்கு உள்ளதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்து, குறித்த விசாரணையை நிறைவு செய்துள்ளது.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால், நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகக் குழு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.