பாடசாலை போக்குவரத்து சாரதியால் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை போக்குவரத்து சாரதியால் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்!


மாணவி ஒருவரை வேனுக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை வேன் சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பாணமுரே பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 


எம்பிலிப்பிட்டிய  பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பாடசாலை வேன் சாரதியால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் மாணவியின் குடும்பத்தினர் எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 


குறித்த மாணவி பாடசாலைக்கு வராமல் பாடசாலை சீருடையில் எம்பிலிப்பிட்டியவில் இருப்பதை கண்ட நபரொருவர் அவதானித்து பாடசாலைக்கு அறிவித்துள்ளார்.


இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் குறித்த மாணவியின் வீட்டுக்கு அறிவித்ததையடுத்து, வீட்டார் இது குறித்து எம்பிலிப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.


தான் புத்தகம் வாங்குவதற்காக கடையொன்றிற்கு சென்ற பின்னர், வேனில்  அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.


குறித்த வேன் பாணமுரே பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வாகன சாரதி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பாணமுரே பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.