சிறு குழந்தையின் மருத்துவ அறிக்கை வைத்து பண மோசடி; இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறு குழந்தையின் மருத்துவ அறிக்கை வைத்து பண மோசடி; இருவர் கைது!


நுவரெலியாவில் சிறு குழந்தையொன்றின் படங்களையும் மருத்துவ அறிக்கையையும் காட்டி பொதுமக்களிடம் மோசடி செய்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த குழந்தையின் தந்தை தம்பனை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் குழந்தையின் படங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையை சட்டவிரோதமாக பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


பண நன்கொடைக்கான தொடர்புத் தகவலாக அவர்கள் தங்கள் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தியதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.


நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 25 மற்றும் 34 வயதுடைய இவர்கள் மிதிகம மற்றும் அஹங்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்களிடம் இருந்து நன்கொடையாக வசூலிக்கப்பட்ட 10,900 ரூபா பணத்தொகையையும் பொலிஸார் மீட்டனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.