மாலைதீவில் சிசுவொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கை பெண் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாலைதீவில் சிசுவொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கை பெண் கைது!


மாலைதீவில் சிசுவொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் அந்த நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பெண் ரகசியமாக சிசுவொன்றை பிரசவித்து, அந்த சிசுவை பையொன்றினுள் இட்டு, கைவிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மாலைதீவு காவல்துறையினரால் மீட்டிருந்த சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள், குறித்த சிசு உயிரிழந்திருந்ததை உறுதிசெய்துள்ளனர்.


இந்தநிலையில், சந்தேகநபரான குறித்த பெண், இலங்கைக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது, மாலைத்தீவு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.