மூன்று பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மூன்று பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!


மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கு இன்று (11) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச கல்விப் பணிப்பாளர் திருமதி நிலானி தம்மிக்க தெரிவித்தார்.


அந்தந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகள் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை இடையூறு இன்றி தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.


பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத்தின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இன்று மூடப்பட்ட கலிபானவளை உயர்தரப் பாடசாலை மாணவர்கள் வெல்லவாய கம்பஹா மகாவித்தியாலயத்திற்குச் சென்றுள்ளனர்.


பாறைகள் விழும் அபாயம் காரணமாக மூடப்பட்ட பிளாக்வுட் உயர்தரப் பாடசாலை கட்டிடம் இடிந்து விழும் அபாயம் காரணமாக, அம்மாணவர்கள் ஹல்துமுல்ல தமிழ் உயர்தரப் பாடசாலைக்குச் சென்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.