வேலை தேடி தாய்லாந்து சென்ற 56 இலங்கையர்களது நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வேலை தேடி தாய்லாந்து சென்ற 56 இலங்கையர்களது நிலை!


வேலை தேடி தாய்லாந்திற்குச் சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரில் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


News First இன் அறிக்கையின்படி, குழுவானது தகவல் தொழில்நுட்பத் தொழில் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்திற்குக் அழைத்துவரப்பட்ட்டனர்.


இருப்பினும், அவர்கள் தற்போது மியான்மரில் பயங்கரவாதக் குழுவால் இயக்கப்படும் சைபர் கிரிமினல் பகுதியில் உள்ள முகாமில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.


பயங்கரவாதக் குழுவினால் இலங்கையர்கள் குழு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பயங்கரவாத குழு அவர்களை விடுவிக்க ஒரு நபருக்கு 8000 அமெரிக்க டாலர்களை கோருவதாகவும் கூறப்படுகிறது. 


இது தொடர்பில் வினவியபோது, ​​மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார, இந்த குறிப்பிட்ட நிலைமையை தாங்கள் அறிந்திருப்பதாக ஒப்புக்கொண்டார்.


மியன்மார் அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட 32 இலங்கையர்களை மீட்க முடிந்ததாக தூதுவர் மேலும் தெரிவித்தார்.


தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள எஞ்சிய 56 இலங்கையர்களை மீட்பது தொடர்பாக இலங்கை மற்றும் மியான்மர் அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 


இவ்வாறான சூழ்நிலைகள் காரணமாக சட்டவிரோத விசாக்கள் மூலம் மியன்மார் அல்லது தாய்லாந்துக்குள் நுழைய முயற்சிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு தூதுவர் பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார். 


மியன்மாரில் சிறைபிடிக்கப்பட்ட இலங்கையர்களின் குழுவின் உறவினர்கள் தங்கள் குழந்தைகளை மீட்டு அழைத்து வருமாறு இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.