பாடசாலையில் 4ஆம் தர சிறுமிகளிடம் பாலியல் சில்மிசம்; ஊழியர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலையில் 4ஆம் தர சிறுமிகளிடம் பாலியல் சில்மிசம்; ஊழியர் கைது!


வென்னப்புவ பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் 04 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள் மற்றும் மாணவர் ஒருவருக்கும் தனது கைத்தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து அம்மாணவர்களின் உடல்களை தொட்டு பாலியல் சில்மிசம் செய்ததாக கூறப்படும் அதே பாடசாலையில் கடமைபுரியும் கல்விசாரா ஊழியர் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.


வென்னப்புவ பொலிஸ் தலைமையக குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் குழுவினர் குறித்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.


லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த இளைஞனின் நடத்தை பற்றி அந்த மூன்று மாணவிகளும், மாணவனும், பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து , இதுபற்றி பாடசாலையின் அதிபர் வென்னப்புவ தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


மேலும், பாலியல் சில்மிசம் மற்றும் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறப்படும்  மூன்று மாணவிகளையும், மாணவியையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். 


அத்துடன், குறித்த மாணவர்களுக்கு ஆபாச காட்சிகளை காண்பிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சந்தேக நபரின் கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ தலைமையக பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திலின ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


-ரஸ்மின்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.