17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் ஒருவர் கைது!


கல்முனை - இஸ்லாமபாத் பகுதியில் உள்ள சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில், அந்த நிலையத்தின் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த மாதம் 17 ஆம் திகதி திருட்டு குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் கொக்குவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அந்த சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.


இந்தநிலையில், குறித்த சிறுவன் கடந்த மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அடிப்படையில், குறித்த சிறுவனின் உடலில் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


இதன்பின்னர் குறித்த சிறுவர் நன்னடத்தை நிலையத்தின் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.