சாதாரண தர பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாதாரண தர பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!


கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார்.


இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், விடைத்தாள்கள் பரீட்சை மூன்று மாதங்கள் தாமதமானதாலேயே கடந்த உயர்தரப் பெறுபேறுகள் தாமதமாகிறது என்றும் தெரிவித்தார்.


சித்தியெய்திய மாணர்வர்களுக்கு நவம்பரில் உயர்தர வகுப்புகள் ஆரம்பமாவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.


வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அடுத்த வருடம் 800,000 சிறார்களுக்கு பாதணிகளை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


அடுத்த வருடம் அனைத்து ஆரம்ப வகுப்புகளுக்கும் மதிய உணவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுசில் பிரேமஜயந்த, பரீட்சைகள் பிற்போடப்பட்டமையால் பிள்ளைகள் வயதாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.


பல்கலைக்கழக ஆசிரியர்களின் பரீட்சை கொடுப்பனவு தொடர்பில் சாதகமான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.