கிரிக்கெட் நிர்வாகம் இடைநிறுத்தம்; அர்ஜுன தலைமையில் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழு நியமனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிரிக்கெட் நிர்வாகம் இடைநிறுத்தம்; அர்ஜுன தலைமையில் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழு நியமனம்!


அர்ஜுன ரணதுங்க தலைமையில் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.


1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.


அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்துடன் இன்றிலிருந்து புதிய இடைக்காலக் குழு தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளது.


அர்ஜுன ரணதுங்க தலைமையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, உபாலி தர்மதாச, சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஹார்டி ஜமால்தீன் ஆகியோர் இந்த குழுவில் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.