குழந்தைகளை கொலை செய்வதாக ஆசிரியை மிரட்டி கப்பம் கோரிய கிராம சேவகர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குழந்தைகளை கொலை செய்வதாக ஆசிரியை மிரட்டி கப்பம் கோரிய கிராம சேவகர் கைது!


ஹோமாகம பிட்டிபன, பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் பிள்ளைகளைக் கொலை செய்யப் போவதாக மிரட்டி 20 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட கிராம சேவகரை இம்மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதிவான் பந்து லியனகே உத்தரவிட்டுள்ளார்.  


ஹோமாகம, பிட்டிபன தெற்கு பகுதியைச் சேர்ந்த கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


ஹோமாகம சுவபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரை மிரட்டி 20 இலட்சம் ரூபா கப்பம் வழங்காவிட்டால் மூன்று பிள்ளைகளையும் கொன்று விடுவதாக அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹோமாகம தலைமையக பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.


இதனையடுத்தே குறித்த கிராம அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.