போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த 6 மாணவர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த 6 மாணவர்கள் கைது!


மட்டக்களப்பு – சந்திவெளி, சித்தாண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த 6 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டி பகுதியில் தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


குறித்த போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் இன்றைய தினம் ஆதரவு தெரிவிக்கும் வகையில் கலந்துகொண்டிருந்தனர்.


இந்தநிலையில், சட்டவிரோதமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.