இருவரையும் சுட்டுக் கொன்று விடுவோம்! பொலிஸ் பரிசோதகருக்கு கொலை மிரட்டல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இருவரையும் சுட்டுக் கொன்று விடுவோம்! பொலிஸ் பரிசோதகருக்கு கொலை மிரட்டல்!


வெளிநாட்டில் இருந்தவாறு அவிசாவளை பிரதேசத்தில் பாரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த 'மன்ன ரமேஷ்' எனப்படும் ரமேஷ் பிரிஜனக அவிசாவளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன ஜயலத்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மன்னா ரமேஷின் தோழர் மகேஷ் தனஞ்சய அண்மையில் ,பொலிஸாரின் கழுத்தை நெரிக்க முற்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


மன்ன ரமேஷ், தலைமை  பிரதான பொலிஸ் பரிசோதகரை தொலைபேசியில் அழைத்து, "எனது பிள்ளை போன்றிருந்த ஒருவனை நீ கொன்றுவிட்டாய் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள். இதற்கு நீயும் உன் பிள்ளையும் பதில் கூற தயாராக இருங்கள். இருவரையும் சுட்டுக் கொன்றுவிடுவோம்" என்று மிரட்டியுள்ளார். 


மன்னா ரமேஷின் பாதாளச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்டோரை பிரதான பொலிஸ் பரிசோதகர் .பிரசன்ன ஜயலத் ஏற்கனவே கைது செய்துள்ளதுடன், இந்த மரண அச்சுறுத்தல் தொடர்பில் சீதாவக்க பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.