பஸ் மற்றும் முச்சரகரவண்டி மோதியதில் இருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ் மற்றும் முச்சரகரவண்டி மோதியதில் இருவர் பலி!


கட்டுநாயக்க - மினுவாங்கொட வீதியில் நேற்றிரவு (22) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.


கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிசொகுசு ரக பேருந்து ஒன்று எதிர்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 19 மற்றும் 25 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


இது தவிர நேற்று இடம்பெற்ற மூன்று வெவ்வேறு வாகன விபத்துகளில் மேலும் 03 பேர் உயிரிழந்தனர்.


காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வாத்துவ பகுதியில் மற்றுமொரு பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது உந்துருளி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த 52 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.


இதேவேளை தெஹியத்தகண்டி மற்றும் அம்புலுவாவ ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு உந்துருளி விபத்துகளில் 56 மற்றும் 75 வயதுடைய இருவர் உயிரிழந்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.