பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று நோய்களின் பரவும் தன்மை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த நோய் நிலைமை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரியுள்ளது.


கண் நோய் வயிற்றுப்போக்கு மற்றும் சுவாச கோளாறுகளுடன் கூடிய காய்ச்சல் வேகமாக பரவுவதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்


இந்த நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த சுய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


நாடளாவிய ரீதியில் குறிப்பாக அதிக மழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நோய் நிலை தீவிரமாகக் கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.