உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு வெளியானது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு வெளியானது!!


2023 க.பொ.த உயர்தர பரீட்சைகள் 2024 ஜனவரி 04 முதல் 2024 ஜனவரி 31 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு இன்று (04) அறிவித்துள்ளது.


திட்டமிடப்பட்ட 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த செப்டெம்பர் மாதம் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து பரீட்சைகள் பிற்போடப்பட்டதாக அமைச்சர் அப்போது தெரிவித்தார்.


2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.