ரயிலுக்கு காத்திருந்த நிலையில் உயிரிழந்த நபர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரயிலுக்கு காத்திருந்த நிலையில் உயிரிழந்த நபர்!


ரயிலில் பயணிப்பதற்காக ஹட்டன் நிலையத்தில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்தவர் மஸ்கெலியா, நல்லதண்ணி பகுதியைச் சேர்ந்த சுமார் 70 வயதுடைய பி.எஸ். ஆறுமுகம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


ரயில் வரும் வரை பயணிகள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் உயிரிழந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.