இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் காணாமல்போன இலங்கைப் பெண் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் காணாமல்போன இலங்கைப் பெண் உயிரிழப்பு!


இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையில் நடைபெற்ற வரும் மோதலில் நேற்று காணாமல் போனதாக கூறப்பட்ட இலங்கைப் பெண் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.


சமூக ஊடகங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.


குறித்த பெண் கம்பஹாவைச் சேர்ந்த 49 வயதான இரு பிள்ளைகளின் தாயாவார்.


அவர்  2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக இஸ்ரேலுக்கு தாதியாக பணிபுரிய சென்றுள்ளார்.


இஸ்ரேலின் தற்போதைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, இராஜதந்திர தலையீட்டின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர முடியும் என நம்புவதாக காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.


மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து காப்பீடு மற்றும் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.