தனுஷ்கவுக்கு எதிரான தடை நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனுஷ்கவுக்கு எதிரான தடை நீக்கம்!


இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தின் போது பெண் ஒருவரை பாலியல்  துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தனுஷ்காவிற்கு இலங்கை கிரிக்கெட் இந்த தடையை விதித்தது, மேலும் அந்த குற்றச்சாட்டில் இருந்து தனுஷை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அண்மையில் விடுவித்தது.


தனுஷ்கவின் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கட் நியமித்த மூவரடங்கிய குழு குற்றச்சாட்டில் இருந்து தனுஷ்கவை விடுவிக்குமாறு சிபாரிசு செய்திருந்தது. இந்நிலையில், தனுஷ்கவின் தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.