காதலியின் நிர்வாண புகைப்படத்தை வீட்டின் முன் ஒட்டிய நபர் கைது! #இலங்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காதலியின் நிர்வாண புகைப்படத்தை வீட்டின் முன் ஒட்டிய நபர் கைது! #இலங்கை


அதிருப்தியடைந்த காதலியின் நிர்வாணப் புகைப்படங்களை பெரிதாக்கி அவரது வீட்டின் முன் வாயிலில் ஒட்டிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேகநபரிடம் இருந்து சிறுமியின் மேலும் 4 நிர்வாண புகைப்படங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவை பெரிதாக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளன. மேலும் நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய மடிகணினியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.


23 வயதுடைய முறைப்பாட்டாளரும் சந்தேகநபரும் மஹரகமவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்ததாகவும், பாடசாலை நண்பரான சந்தேக நபருடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கெஸ்பேவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன சமரசிங்கவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.