தேங்காய் வியாபாரியின் வீட்டினுள் புகுந்து 20 கோடி பணம் மற்றும் தங்க நகை கொள்ளை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேங்காய் வியாபாரியின் வீட்டினுள் புகுந்து 20 கோடி பணம் மற்றும் தங்க நகை கொள்ளை!


கூரிய ஆயுதங்களுடன் வீட்டினுள் நுழைந்த சிலர், அங்கிருந்தவர்களை பயமுறுத்தி சுமார் 20 கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.


மாதம்பை தம்பகல்ல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கொள்ளையர்கள்  வீட்டு உரிமையாளர்களைப் பயமுறுத்தி ஓர் அறையில் அவர்களை அடைத்தே  இவ்வாறு கொள்ளையிடடு தப்பிச் சென்றுள்ளனர்.   


தேங்காய் வியாபாரி ஒருவரின் வீட்டில் நேற்று (18) மாலை 7.00 மணியளவில் வேனில் வந்த நால்வர் இவ்வாறு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.


மேலும், வாகனத்தின் திறப்புக்களையும்  மற்றும் கையடக்கத் தொலைபேசிகளையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.