சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் நிர்வாணமாக ஓட்டம்! #இலங்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் நிர்வாணமாக ஓட்டம்! #இலங்கை


17 வயதுடைய சிறுவனால் 15 வயதுடைய சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமொன்று குருநாகல் - கொஹிலகெதர பிரதேசத்தில் இன்று (31) பதிவாகியுள்ளது.


சிறுமியின் வீட்டில் பெரியவர்கள் இல்லாத போது குறித்த சிறுவன் பலமுறை வீட்டிற்கு வந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்நிலையில் சம்பவத்தினத்தன்று சிறுமியின் பாட்டி மற்றும் அவரது சகோதரி சம்பவத்தை கண்டதையடுத்து, குறித்த சிறுவன் அணிந்திருந்த ஆடைகளையும் விட்டு நிர்வாணமாக தப்பி ஓடியுள்ளதாக  தெரியவந்துள்ளது.


இந்நிலையில் சிறுமியை குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.


மேலும் குறித்த சிறுமி, கசிப்பு மற்றும் பிற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக  ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.