ஈஸ்டர் தாக்குதலின் பின்னணினியில் அபுஹிந் என்ற நபரோ குழுவோ இருப்பதாக புதிய தகவல்கள்! -கர்தினால் மல்கம் ரஞ்சித்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணினியில் அபுஹிந் என்ற நபரோ குழுவோ இருப்பதாக புதிய தகவல்கள்! -கர்தினால் மல்கம் ரஞ்சித்


2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை தாமதமாக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை கர்தினால் மல்கம் ரஞ்சித் மீண்டும் சாடியுள்ளார்.


பயங்கரவாத குழுவினர் ஈவிரக்கமற்ற தாக்குதல்களை மேற்கொள்வதற்கான அனைத்து ஆதரவையும் வழங்கிய குழுவொன்றுள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என கர்தினால் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெறாத சில விடயங்கள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அபுஹிந் என்ற நபரோ குழுவோ இருப்பதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன என கர்தினால் தெரிவித்துள்ளார்.


இந்த ஆதாரம் வெளியானவேளை ஐந்து நீதிபதிகளில் ஒருவர் இந்த பெயர் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார், ஊடகங்கள் இருப்பதால் தன்னால் விபரங்களை வெளியிட முடியாது என குறிப்பிட்டுள்ள சாட்சி எழுத்தில் அது குறித்த விடயங்களை வழங்கியுள்ளார் என கர்தினால் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.