மொ/பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரியிலிருந்து முதன்முறையாக வைத்திய பீடத்திற்கு தெரிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மொ/பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரியிலிருந்து முதன்முறையாக வைத்திய பீடத்திற்கு தெரிவு!


அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த(உ/த) பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் முஸ்லிம் மத்திய கல்லூரியின் தற்போதைய அதிபர் முபாரக் அவர்களின் புதல்வி பர்ஹத் பஹ்னா இம்முறை இடம் பெற்ற க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி இரண்டு A மற்றும் ஒரு C சித்திகளையும் எம்.என். நிஸ்லா இரண்டு A மற்றும் C
சித்திகளையும் எம்.டி சாதிகா A மற்றும் இரண்டு C பெற்று மொணராகலை மாவட்டத்தில் முதல் வைத்திய பீடத்திற்கு தெரிவாகி மொணராகலை மாவட்டத்திற்கும் மெதகமை பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதோடு பௌதீக விஞ்ஞான பிரிவில் தோற்றிய மாணவர்களான எம்.ஆர் ரிம்னாத் தலா ஒரு A மற்றும் B,C பெற்றுள்ளார். 

மேலும் எம் அப்வான் ஒரு A, இரண்டு C களையும், நௌபர்தீன் மூன்று B களை பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி உள்ளனர்.

மேலும் வணிக பிரிவில் பஸ்ல் ரஹ்மான் ஒரு A மற்றும் இரண்டு B களையும் பெற்றுள்ளதோடு கலைப்பிரிவில் ரிஸ்தா இரண்டு A, ஒரு B , இஸ்ஸதுல் பஸ்னா இரண்டு A, ஒரு B , மற்றும் சம்ஹா, சிறாஜ் ஆகிய மாணவர்கள் ஒரு A, இரண்டு B பெற்று பல்கலைக்கழகம் நுழைய வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

மேலும் எமது பாடசாலை மற்றும் எமது ஊரிற்கு பெருமை தேடித்தந்த மாணவச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்.

தகவல் 
ஏ.எச்.எம். சிஹார்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.