கஞ்சாகாரன் என மக்களை சாடாமல், கஞ்சா போன்றவற்றை ஏற்றுமதி செய்து டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கஞ்சாகாரன் என மக்களை சாடாமல், கஞ்சா போன்றவற்றை ஏற்றுமதி செய்து டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும்!


கசிப்புகாரன், கஞ்சாகாரன் என மக்களை சுட்டிக்காட்டாமல் கசிப்பு கஞ்சா போன்றவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என டயனா கமகே தெரிவித்துள்ளார்.


மதுபானங்களின் விலை அதிகரிப்பால் கள்ளச்சாரயத்தினை மக்கள் வீடுகளில் உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளனர். இது 500 சதவீதமாக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதன்காரணமாக வீடுகளில் கள்ளச்சாரயம் தயாரிக்கப்படுவதை தடுப்பதற்காக மதுபானங்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்களை மூளைச்சலவை செய்துள்ளனர். கஞ்சா, கள்ளச்சாரயம் பயன்படுத்துபவர்கள் கஞ்சாக்காரர்கள் கசிப்புகாரர்கள் என அழைக்கப்படுகின்றனர். கஞ்சா, கசிப்பு ஆகியவற்றின் பெறுமதியை மக்கள் உணர்வதில்லை என தெரிவித்த டயனா கமகே கள்ளச்சாரயம் ரஷ்யாவின் 'வொட்கா' போன்றது எனவும் தெரிவித்துள்ளார்.


சுத்தமான பழங்களை பயன்படுத்தி கள்ளச்சாரயத்தை தயாரிக்கின்றனர்; நாங்கள் அதனை பெருமளவில் உற்பத்தி செய்தால் நாங்கள் அதனை ஏற்றுமதி செய்ய முடியும். அதனால் நாங்கள் பெறக்கூடிய டொலர் வருமானம் எம்மால் கற்பனை செய்ய முடியாதளவு அதிகமாகும். பாராளுமன்றத்திலும் இந்த யோசனையை முன்வைக்கவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.