அவிசாவளை துப்பாக்கிச்சூடு சம்பவம்; ஊடகவியலாளர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவிசாவளை துப்பாக்கிச்சூடு சம்பவம்; ஊடகவியலாளர் கைது!


அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


துபாயில் இருந்து செயல்படும் பிரபல குற்றவாளி 'மன்னா ரமேஷ்' துப்பாக்கிச் சூட்டுக்கு மூளையாக செயல்பட்டவருக்கு அந்த பத்திரிக்கையாளர் இரகசிய தகவலை வழங்கியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளால் நேற்றிரவு மீகொட பிரதேசத்தில் வைத்து குறித்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற காலப்பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபருடன் குறித்த ஊடகவியலாளர் கைத்தொலைபேசியில் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது. 


மேலும் மன்னா ரமேஷ் என்பவர் ஊடகவியலாளரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பல தடவைகள் பணத்தை வைப்பிலிட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


துப்பாக்கிச்சூடு நடத்திய நபருக்கு அடைக்கலம் வழங்கிய ஊடகவியலாளர் மூவரும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 


குறித்த ஊடகவியலாளரை 72 மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதுடன், ஏனைய மூன்று சந்தேகநபர்களை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.