பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு!


நேற்று (31) இரவு அமுலுக்கு வந்த எரிபொருள் விலை உயர்வை அடுத்து இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில்   போக்குவரத்து கட்டணத்தை 5% அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.


"நேற்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அது எமது சேவைகளை பாதிக்கிறது. அரசாங்கம் விலைகளை குறைத்த போது பெற்றோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக கட்டணத்தை குறைத்தோம். எனினும் இந்த நேரத்தில் நாங்கள் சிரமத்தை எதிர்நோக்குகிறோம். 


டீசல் விலையேற்றத்துடன், காப்புறுதி உட்பட ஏனைய சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாரதூரமான பிரச்சினைகள் அதிகரித்துள்ளன" என குறித்த சங்கத்தின் தலைவர் என்.எம்.கே. ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.