முன்னணி பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண் வாடிக்கையாளர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்; ஐவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னணி பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண் வாடிக்கையாளர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்; ஐவர் கைது!


பொரளையில் உள்ள முன்னணி பல்பொருள் அங்காடி விற்பனை நிலையத்தில் பெண் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த பல்பொருள் அங்காடி விற்பனை நிலையத்தின் பணியாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஒரு பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள் ஒரு பெண் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.


ஹன்வெல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. எனினும் பொரளையில் உள்ள விற்பனை நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.


விற்பனை நிலையத்திலிருந்து பல ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்குவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.


இந்த சம்பவம் செப்டம்பர் 18 ஆம் திகதி நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சமூக ஊடகங்களில் வீடியோ வைரலாகும் வரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.


சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்பொருள் அங்காடி நிர்வாகமும் முன்னதாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.