காலி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர் தொடர்பில் வெளியான மேலதிக தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர் தொடர்பில் வெளியான மேலதிக தகவல்!


காலி – டிக்சன் வீதியில் நேற்று இரவு (23) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த வர்த்தகர், மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக்கவின் மாமனார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


காலியில் அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.


மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.