மத்திய மற்றும் தென் மாகாணங்களில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய மற்றும் தென் மாகாணங்களில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!


மத்திய மற்றும் தென் மாகாணங்களில் நாளை (27) மற்றும் ஒக்டோபர் 02ஆம் திகதிகளில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும், இணைய முறை மூலம் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை பெறுவது செப்டம்பர் 24ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது.


வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாததால் வாகன உரிமையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்கும் வகையில் நாளை முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதம் வசூலிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.