க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்பட்டது!


திட்டமிடப்பட்ட 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


சபையில் உரையாற்றிய அமைச்சர், புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். 


பரீட்சைகளை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 


இது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்த முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.


பரீட்சைக்கு வரும் மாணவர்களுக்கான தயாரிப்புகளுக்கு போதிய கால அவகாசம் இல்லாததும் முடிவெடுப்பதற்கான முக்கிய காரணியாகக் கருதப்படுவதாக அவர் மேலும் கூறினார்.


2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.