உயிர்கொல்லி 'நிபா' வைரஸ் குறித்து அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயிர்கொல்லி 'நிபா' வைரஸ் குறித்து அறிவித்தல்!


இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இனங்காணப்பட்டுள்ள ‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.


உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் 'நிபா' வைரஸைக் கண்டறிவதற்குத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில், இன்னும் சில தினங்களில் அவை இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இதேவேளை, நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகளாவிய ரீதியில் குறிப்பிட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் தயாரிக்கப்படவில்லை என்று இது குறித்து கருத்து தெரிவித்த வைத்தியர் ஜானகி அபேநாயக்க கூறியுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.