எரிபொருள் விலை உயர்வு: முச்சக்கர வண்டி மற்றும் பேருந்து கட்டணங்களில் புதுப்பிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் விலை உயர்வு: முச்சக்கர வண்டி மற்றும் பேருந்து கட்டணங்களில் புதுப்பிப்பு!


எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


ஏற்கனவே பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில், கட்டண உயர்வின் மூலம் பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை என சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார். 


நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


இதேவேளை, டீசல் விலை உயர்வினால் பஸ் கட்டணம் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


விலைச் சூத்திரத்தின் பிரகாரம் அண்மைய விலையேற்றம் 4%க்கு அதிகமாக இருந்தால், பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பேருந்து கட்டண திருத்தம் குறித்த முடிவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று அறிவிக்கும் என்று மூத்த அதிகாரி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.