இன்று ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி!


2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.


குறித்த போட்டியானது கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.


தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணியும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும் போட்டியில் மோதுகின்றன.


ஆசியக் கிண்ண சுபர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் முறையே இரண்டு வெற்றிகள் பெற்றதன் மூலம் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டன.


ஆசியக் கிண்ணத் தொடரின் தற்போதைய சம்பியனான இலங்கை 7 ஆவது முறையாக கோப்பையை வெற்றி கொள்ளும் எதிர்பார்ப்புடன் போட்டியில் களமிறங்குகின்றது.


இரு நாட்டு இரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ள இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.


இறுதிப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் ஒன்லைன் ஊடாக நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.