மனைவியின் ஈனச் செயலால் 6 வயதுடைய மகளுடன் தற்கொலை செய்துகொண்ட தந்தை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மனைவியின் ஈனச் செயலால் 6 வயதுடைய மகளுடன் தற்கொலை செய்துகொண்ட தந்தை!


தனது மனைவி வேறொரு நபருடன் தகாத உறவைப் பேணுவதையறிந்து, 38 வயதுடைய கணவன் தனது 6 வயது மகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.


திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு நோக்கி சென்ற ரயிலுக்கு முன் குறித்த நபர் பாய்ந்த சம்பவமானது நேற்றிரவு (06) ராஜ எல பகுதியில் இடம்பெற்றுள்ளது.


குறித்த நபரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு அண்மையில் நாடு திரும்பியதாகவும் அங்கு வேறொரு நபருடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


உயிரிழந்த இருவரும் கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.