4 வயது குழந்தை தூக்கத்தில் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

4 வயது குழந்தை தூக்கத்தில் உயிரிழப்பு!


04 வயதுடைய பெண் குழந்தையொன்று நேற்று (11) திடீரென தூக்கத்தில் உயிரிழந்துள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த குழந்தை ஹொரணையில் உள்ள திக்கேனபுர பகுதியைச் சேர்ந்தவர்.


நேற்று பிற்பகல் குழந்தை தனது தாயுடன் உறங்கச் சென்றதாகவும், ஆனால் படுக்கையை நனைத்ததால் உடைகளை மாற்றுவதற்காக தாய் குழந்தையை எழுப்ப முயன்றபோது உயிரற்ற நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


குழந்தை உயிரற்ற நிலையில் காணப்பட்டதையடுத்து, தாய் தனது கணவருக்கு அறிவித்து, அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உதவியுடன் ஹொரணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.


எனினும், வைத்திய பரிசோதனையின் பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாக ஹொரண வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்தனர்.


குழந்தையின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று ஹொரண வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.


இந்த மரணம் தொடர்பில் பாணந்துறை மற்றும் ஹொரண பொலிஸ் அதிகாரிகளால் கூட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.