2023 க.பொ.த உயர்தர பரீட்சை: புதிய திகதி தொடர்பான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2023 க.பொ.த உயர்தர பரீட்சை: புதிய திகதி தொடர்பான அறிவிப்பு!


2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இறுதித் திகதியை ஒக்டோபர் முதல் வாரத்தில் கல்வி அமைச்சு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் ஒக்டோபர் 02 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


திட்டமிடப்பட்ட 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


பரீட்சைகளை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என அமைச்சர் அப்போது தெரிவித்தார். 


2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவிருந்தன.


எவ்வாறாயினும், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன. 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.