ஐரோப்பாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக ஏமாற்றி பெருந்தொகை பணம் கொள்ளையடித்த ஏஜென்சி உரிமையாளர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐரோப்பாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக ஏமாற்றி பெருந்தொகை பணம் கொள்ளையடித்த ஏஜென்சி உரிமையாளர் கைது!


ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் இருந்து 10 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த 55 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற 7 முறைப்பாடுகளை அடுத்து, கொழும்பு புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள், வெயங்கொடையைச் சேர்ந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.


சந்தேகநபர் கொழும்பு 05 பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதுடன், இங்கிலாந்து, போலந்து போன்ற நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


குறித்த நபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுச் சான்றிதழைப் பெறவில்லை என விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.