திருகோணமலை பயிற்சி விமான விபத்தில் இருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருகோணமலை பயிற்சி விமான விபத்தில் இருவர் பலி!


திருகோணமலை - சீனக்குடா விமான பயிற்சித் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமான பயிற்சியாளர் உட்பட இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பயிற்சியில் ஈடுபடுவதற்காக இன்று (08) முற்பகல் விமானத்தை செலுத்துவதற்கு முற்பட்ட போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.


PT 6 ரக விமானம் இன்று காலை வான் சோதனைக்காக புறப்பட்டு முற்பகல் 11.27 மணியளவில் சீனக்குடா முகாமில் விழுந்து நொறுங்கியதாக குரூப் கப்டன் விஜேசிங்க தெரிவித்தார்.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.