அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!


அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சின் ஒதுக்கீட்டுக்காக மேலதிகமாக 30 பில்லியன் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.


அடுத்த 3 மாதங்களுக்கான மருத்துவ விநியோகத்துக்காக இந்த ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இதேவேளை, புதிய மருத்துவ சட்டமொன்றை 6 மாதங்களுக்குள் வரையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


தற்போதைய மருத்துவ கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதன் மூலம் சிறந்த சுகாதார சேவையை வழங்குதல் மற்றும் பிரஜைகளின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டத்தை வரையுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.