![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjF6YR2aA46pY3dt-7UboKhG0OAfDR-xIprGtXZPYevgfAtp4u6IoEgJYWlHjAL2Flir8xdtPM36C730q2VstfR5ZuS8bJvn3TV45ZCdF-3aVkpn2Gj46cmRKsWlxVGfFxZLkcXQGOu_yeK4yRmW69of76AeFtjdC9qVk7TJzNAME84XBMBtfaVqnLe0tYR/s16000/IMG_6264.jpeg)
கடந்த வாரம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரகசியமாக நிறுத்தப்பட்ட குடிவரவு எல்லை சேவை முகவர்களால் குறைந்தது ஏழு பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் போலியால செய்யப்பட்ட வெளிநாட்டு விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகளுடன் காணப்பட்டதாகவும், மனித கடத்தல்காரர்களால் அதிக கட்டணம் செலுத்தி ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் இலுக்பிட்டிய கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் பலர் வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த இலுக்பிட்டிய, வடக்கில் மிகப் பெரிய மனித கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பலர் கடத்தல்காரர்களுக்கு தலா ரூ. 5 மில்லியன் வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் உயர் கண்காணிப்பு காரணமாக பலர் ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்புவதாகவும், தற்போது இவர்கள் வான்வழிப் பாதையை நாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தாய்லாந்து, இந்தோனேஷியா, மியன்மார், வியட்நாம் மற்றும் கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஆரம்பத்தில் பயணம் செய்த பல இலங்கையர்களும் கடல் மார்க்கமாக ஐரோப்பாவிற்குப் பயணிக்கத் தெரிவு செய்துள்ளதாகவும் இலுக்பிட்டிய சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களை கைது செய்ய விமான நிலையத்தில் நன்கு பயிற்சி பெற்ற குடிவரவு எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.