நாட்டின் வீசா முறையை மிகவும் இலகுபடுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் வீசா முறையை மிகவும் இலகுபடுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம்!


சமகாலத்தில் நிலவுகின்ற வீசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் மற்றும் அதன்கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு அமைய எமது நாட்டுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவருக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு தினைக்களத்தால் வருகைதரும் வீசா, வதிவிட வீசா மற்றும் பயண வீசா என 3 வகையான வீசாக்கள் வழங்கப்படுகின்றன.


வருகைதரு வீசா மற்றும் வதிவிட வீசா ஆகிய 2 வகையான வீசா முறைமையின் கீழ் வழங்கப்படுகின்ற வீசா வகைகளில் காணப்படுகின்ற சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு அதிகளவிலான வெளிநாட்டவர்களைக் கவர்ந்திழுக்கின்ற வீசா முறைகளைக் கருத்திலெடுத்து எமது நாட்டில் நடைமுறையிலுள்ள வீசா முறையை மீண்டும் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.