பங்களாதேஸிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடன் மீளச்செலுத்தப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பங்களாதேஸிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடன் மீளச்செலுத்தப்பட்டது!


இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், பங்களாதேஸிடம் இருந்து பெற்றுக்கொண்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலரை மீள செலுத்தியுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


இலங்கையினால் மீள செலுத்தப்பட்ட தொகையானது கடந்த 17ஆம் திகதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பங்களாதேஸ் மத்திய வங்கியின் பேச்சாளரை மேற்கோள் காட்டி, டாக்கா ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் பதில் நிதியமைச்சர் தெரிவிக்கையில்,


நாணய பறிமாற்று வசதியின் கீழ் பங்களாதேஸிடம் இருந்து பெற்றுக்கொண்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் முதல் தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை மீள செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


இரண்டாம் தவணையாக 100 மில்லியன் அமெரிக்க டொலரையும், மூன்றாம் கட்டமாக 50 மில்லியன் அமெரிக்க டொலரையும் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


எனினும், அதற்கான கால எல்லை தொடர்பில் அவர் வெளிப்படுத்தவில்லை.


இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு பங்களாதேஸிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றிருந்தது.


அதனை மீள செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது.


எனினும், இருவேறு சந்தர்ப்பங்களில் கடனை செலுத்துவதற்கான அவகாசம் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.