நாமல் குமாரவை தாக்கி கொள்ளையடித்த தந்தை மற்றும் மகன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாமல் குமாரவை தாக்கி கொள்ளையடித்த தந்தை மற்றும் மகன் கைது!


ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவை தாக்கி அவரிடமிருந்து 60,000 ரூபா மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் தந்தை மற்றும் மகன் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட தந்தை 35 வயதான வர்த்தகராவார். அவரது மகன் 23 வயதான இளைஞராவார்.


நாமல் குமாரவின் மனைவி பொலிஸ் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்தின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  


இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.