இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் அவருக்கு ஒரு இலட்சம் பாகிஸ்தானிய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பையடுத்து அவர் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் மீது பதிவு செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.